ஏடிபி பைனல்ஸ் தொடருக்கு தகுதி பெற்றது ரோகன் போபண்ணா - மேத்யூ எப்டன் ஜோடி
புதுடெல்லி: ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் டென்னிஸ் தரவரிசையில் முன்னணியில் உள்ள 8 வீரர்கள் மற்றும் 8 ஜோடிகள் கலந்து கொள்ளும் ஏடிபி பைனல்ஸ் தொடர் நடைபெறும். இந்த ஆண்டுக்கான தொடர் வரும் நவம்பர் 10 முதல் 17-ம் தேதி வரை இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற உள்ளது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாட இதுவரை இத்தாலியின் ஜன்னிக் ஷின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஜிவேரேவ், ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் ஆகிய 4 பேர் தகுதிபெற்றுள்ளனர். மீதம் உள்ள 4 இடங்கள் தற்போது நடைபெற்று வரும் பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரின் முடிவில் தெரியவரும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


