அஸ்வின், ஜடேஜா செய்ய முடியாததை செய்த பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் சஜித் கான், நோமன் அலி
கடந்த 18 டெஸ்ட் தொடர்களில் ஒன்றிரண்டு தொடர்கள் நீங்கலாக முழுதும் குழிப்பிட்ச்களாகப் போட்டு கோலி, தோனி உள்ளிட்ட கேப்டன்களின் வெற்றிப்புளிப்புப் பெருமிதத்திற்காகவும், சிறிது காலமாக ஐபிஎல் அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வணிக நோக்கங்கள் அணித்தேர்வில் செலுத்திய தாக்கத்திற்காகவும் இந்திய அணி பெற்ற பரிசு நியூஸிலாந்திடம் வரலாறு காணாத டெஸ்ட் தொடர் தோல்வி.
மாறாக பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் வரலாறு காணாத உதையை முல்டான் முதல் டெஸ்ட்டில் வாங்கி, இனி மீளவே வழியில்லை என்று அணியே முடங்கி விட்டது, அடுத்த மே.இ.தீவுகள் போல் ஆகப்போகிறது என்றெல்லாம் இந்திய பட்சபாத ரசிகர்களில் ஒரு பிரிவினர் கெக்கலி கொட்டிச் சிரித்துக் கொண்டிருக்க, கிட்டத்தட்ட ஓராண்டு காலம் சிகப்புப் பந்து கிரிக்கெட் பக்கமே தலைவைத்துப் படுக்காத இடது கை ஸ்பின்னர் நோமன், அலி, சஜித் கான் என்ற ஆஃப் ஸ்பின்னரைக் கொண்டு வந்து தொடரை 2-1 என்று கைப்பற்றியதோடு, இங்கிலாந்தின் ‘பாஸ்பால்’ புளிப்புக்கு செம ஆப்பு வைத்து இங்கிலாந்தை மறுபரிசீலனைச் செய்ய வைத்துள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


