100 சதவீதம் வலி இல்லை: சொல்கிறார் முகமது ஷமி

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதன் பின்னர் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமது ஷமியின் காலில் வீக்கம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்திருந்தார்.

இதனால் அடுத்த மாத இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் ஷமி விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நேற்று முன்தினம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர், முகமது ஷமி சுமார் ஒரு மணி நேரம் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். இதை இந்திய அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் கவனித்தனர். தொடர்ந்து முகமது ஷமிக்கு சில பீல்டிங் பயிற்சிகளும் அளிக்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.