“வினேஷ் போகத், புனியாவின் செயலே போராட்டத்தை பாதித்தது” - சாக்‌ஷி மாலிக்

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஆசிய போட்டிக்கான தகுதிப் போட்டியில் இருந்து வினேஷ் போகத், பஜ்ரங் புனியா விலக்கு பெற்றது தங்களது போராட்டத்தை பாதிக்க செய்தது என முன்னாள் மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ‘விட்னஸ்’ என்ற தலைப்பில் பத்திரிகையாளர் ஒருவருடன் இணைந்து சாக்‌ஷி மாலிக் எழுதியுள்ள புத்தகத்தில் தெரிவித்துள்ளார். “சுயநலமாக யோசித்த காரணத்தால் எங்களது போராட்டம் பாதிக்கப்பட்டது. பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத்துக்கு நெருக்கமாக இருந்தவர்களின் பேராசை இதற்கு காரணம். ஆசிய போட்டிக்கான தகுதி சுற்றில் இருந்து அவர்கள் இருவரும் விலக்கு பெற்ற முடிவினால் போராட்டத்துக்கு எந்த ஆதாயமும் இல்லை. அது எங்கள் போராட்டத்தின் நோக்கத்தை மாற்று கண்ணோட்டத்தில் பலரையும் தள்ளியது. எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தந்தவர்களையே நாங்கள் சுயநலத்துக்காக போராடுகிறோமோ என எண்ண செய்தது” என சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.