‘ஆடும் லெவனில் சர்பராஸை காட்டிலும் கே.எல்.ராகுலை தேர்வு செய்வேன்’ - பார்த்தீவ் படேல்

பெங்களூரு: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஷுப்மன் கில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியென்றால் சர்பராஸ் கான் அல்லது கே.எல்.ராகுல் ஆகிய இருவரில் ஒருவருக்குதான் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும். இந்தச் சூழலில் ஆடும் லெவனில் ராகுலை தேர்வு செய்வேன் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் சதம் கண்டார். ராகுல் ரன் சேர்க்க தடுமாறினார். அவரை நீக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் இந்திய அணியின் தோல்விக்கு பிறகு சொல்லி இருந்தனர். “அடுத்த டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனில் ஷுப்மன் கில் இடம் பெறும் பட்சத்தில் சர்பராஸ் கான் அல்லது கே.எல்.ராகுலை வைத்து ஆடுவதா என்று கேள்வி எழவே செய்கிறது. நான் ராகுலை வைத்து ஆடுவேன். அணி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வைத்து இதனை சொல்கிறேன். இருந்தாலும் இது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தே அமையும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.