ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் விளாசிய புஜாரா - சதங்களில் லாராவை முந்தினார்!
ராஜ்கோட்: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சீசனில் இரட்டை சதம் விளாசியுள்ளார் இந்திய வீரர் புஜாரா. இது முதல் தர கிரிக்கெட்டில் அவரது 18-வது இரட்டை சதமாக அமைந்துள்ளது.
36 வயதான புஜாரா, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பினை பெறாத சூழலிலும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். ரஞ்சி கோப்பை 2024-25 கிரிக்கெட் சீசனில் சவுராஷ்டிரா அணிக்காக அவர் விளையாடி வருகிறார். சத்தீஸ்கர் அணிக்கு எதிரான போட்டியில் 383 பந்துகளை எதிர்கொண்டு 234 ரன்களை அவர் எடுத்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். இது முதல் தர கிரிக்கெட்டில் புஜாராவின் 18-வது சதமாகும். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் (ஆல்-டைம்) அதிக இரட்டை சதம் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்துக்கு புஜாரா முன்னேறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


