டெல்லி கேபிடல்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் ஹேமங் பதானி!
புது டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தமிழக கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான ஹேமங் பதானி டெல்லி கேபிடல்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இவரோடு மற்றொரு முன்னாள் இந்திய வீரர் வேணுகோபால் ராவை இயக்குநராக நியமித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ்.
ஏழு சீசன்களுக்குப் பிறகு ரிக்கிபாண்டிங் டெல்லி கேபிடல்ஸ் தலைமை கோச் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்று பஞ்சாப் கிங்ஸுக்கு தலைமைப் பயிற்சியாளர் ஆனார். இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையைக் கூட டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2014 முதல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளராகவும், புதிய திறமைகளை கண்டுப்பிடிப்பவராகவும் இருந்து வருகிறார், ஆனால் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படவில்லை. ஆம்ரே கழற்றி விடப்பட்டுள்ளார். அதேசமயம், டெல்லி கேபிடல்ஸின் மகளிர் பிரிவு பிரீமியர் லீக் கிரிக்கெட் இயக்குநராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். பிறகு 2027-ல் மீண்டும் அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஜே.எஸ்.டபிள்யூ, ஸ்போர்ட்ஸ் ஆடவர் ஐபிஎல் டெல்லி அணிக்கு பொறுப்பாளராக வரும்போது கங்குலி மீண்டும் இங்கு இயக்குநராவார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


