சுயநலமற்ற வீரர்கள்தான் என் அணிக்குத் தேவை - சூரியகுமார் யாதவ்
மட்டையாளர்களின் சொர்க்கம், ஹை ஸ்கோர் ரப்பர் பந்து பிட்ச் ஆகிய ஹைதராபாத் மைதானத்தில் வங்கதேசத்தை பல பேட்டிங் சாதனைகளுக்கு இடையில் வென்று தொடரை 3-0 என்று கைப்பற்றியதையடுத்து இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தன் அணியில் சுயநலமற்ற வீரர்களுக்குத்தான் இடம் என்று கூறியுள்ளார்.
சஞ்சு சாம்சன் ஒரு தரமான கிரிக்கெட் வீரர் என்பதோடு காட்டடி மன்னன் என்பதையும் நிரூபித்தது, 29 பந்துகளில் 62 என்று அதிரடி காட்டியவர் ஐந்தே பந்துகளில் 92 ரன்களுக்குச் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எப்படி எனில் 10வது ஓவரை வீசிய வங்கதேச ஸ்பின்னர் ரிஷாத் ஹுசைனை 5 சிக்சர்கள் விளாசி பின்னி எடுத்து 40 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய வீரர் ஒருவரின் 2வது அதிவேக டி20 சதமாகும் இது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

