வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி: ஆட்ட நாயகனாக அஸ்வின் தேர்வு
சென்னை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. ஆட்ட நாயகனாக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வானார்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் விளாசிய 113 ரன்கள், ரவீந்திர ஜடேஜா சேர்த்த 86 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 376 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதேவேளையில் வங்கதேச அணி 149 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு பாலோ ஆன் கொடுக்காமல் 227 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியஅணி 64 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஷுப்மன் கில் 119, ரிஷப் பந்த் 109 ரன்கள் விளாசினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

