“எனக்குரிய இடம் டெஸ்ட் கிரிக்கெட் தான்!” - ரிஷப் பந்த் உற்சாகம்
புது டெல்லி: கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரிஷப் பந்த் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்பியது மட்டுமல்லாமல், சதத்தை விளாசி அணியின் வெற்றியில் பங்களிப்பு செய்ததோடு மீண்டும் இந்திய பேட்டிங் வரிசையின் தவிர்க்க முடியாத முக்கியஸ்தர் ஆனது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
2023-ம் ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புவோமா என்ற ஐயத்துடனும் கவலையுடனும் வாழ்ந்து வந்தார் ரிஷப். தோனி அத்தனையாண்டு காலம் அத்தனை டெஸ்ட் போட்டிகளை ஆடி வெறும் 6 சதங்களையே எடுக்க ரிஷப் பந்த் இப்போதே டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்களை எடுத்து அவரைச் சமன் செய்துள்ளார். ரிஷப் ஒருநாள் போட்டிகள், டி20-யில் ஆடுவதை விட தன்னம்பிக்கையுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது அவரது உடல் மொழியில் வெட்ட வெளிச்சமாக சேப்பாக்கத்தில் தெரிந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

