IND vs BAN | மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிப்பு - வங்கதேச அணி 107/3
கான்பூர்: இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 107 ரன்களை சேர்த்தது. இடைவிடாது பெய்த மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் 35 ஓவர்களுடன் நிறுத்தப்பட்டது.
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இதன் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வங்கதேச அணியின் ஓப்பனர்களாக ஷத்மான் இஸ்லாம் - ஜாகிர் ஹசன் களமிறங்கினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

