ஐபிஎல் 2025 சீசனில் தோனி விளையாடுவது உறுதி: ரூ.4 கோடியை ஊதியமாக பெறுவார் என எதிர்பார்ப்பு

புதுடெல்லி: 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் மகேந்திர சிங் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்த புதிய விதிகள் இதை உறுதி செய்துள்ளன. அவர் ஊதியமாக ரூ.4 கோடியைப் பெறுவார் என்று தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் புகழ் பரவியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் இந்தப் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 18-வது சீசன் போட்டிகள் 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான விதிகளை வகுப்பது உள்ளிட்டவை குறித்து பெங்களூருவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஐபிஎல் நிர்வாகக் குழுவில் விவாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.