“10 கோடி மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்...” -  ஷாகிப் அல் ஹசனுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை

வங்கதேசம்: சொந்த மண்ணில் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறும் விருப்பத்தை ஷாகிப் அல் ஹசன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமெனில் அவர் தன் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று வங்கதேச இளையோர் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஓய்வு அறிவித்த ஷாகிப் அல் ஹசன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டாக்காவில் தன் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடி பிரியாவிடை அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு கொலை வழக்கில் இவர் குற்றவாளியாக முதல் தகவலறிக்கையில் சேர்க்கப்பட்ட நிலையிலும் அரசியல் நிலைப்பாடு காரணமாக 10 கோடி மக்கள் அவர் மீது கோபமாயிருக்கும் போதும் அவர் அரசு பாதுகாப்பு உத்தரவில்லாமல் வங்கதேசத்துக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.