‘தற்கொலை எண்ணம் கூட வந்தது...’ - இந்திய தடகள வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ்

மொகாலி: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனதால் தற்கொலை செய்துகொள்ள நினைத்ததாக இந்திய தடகள வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கத்தை 800 மற்றும் 1500 மீட்டரில் வென்றிருந்தார் ஹர்மிலன் பெயின்ஸ். இருப்பினும் காயம் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்குக்கு அவர் தகுதி பெறவில்லை. இந்தச் சூழலில் அதன் காரணமாக தற்கொலை செய்துகொள்ள நினைத்த வேதனை தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.