தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி: 2-வது நாளில் இந்தியா தங்க வேட்டை
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் 4-வது தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டி நடை பெற்றுவருகிறது. இதன் 2-வது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் உன்னதி ஐயப்பா பந்தய தூரத்தை 13.93 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான சபிதா டாப்போ இலக்கை 13.96 விநாடிகளில் எட்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கையின் சந்துன் கோஷாலா பந்தய தூரத்தை 14.06 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இந்தியாவின் நயன் பிரதீப் சர்தே (14.14) வெள்ளிப் பதக்கமும், இலங்கையின் விஷ்வா தருகா (14.27) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

