இந்தியாவில் எஸ்ஜி பந்துகளை எதிர்கொள்வது பெரிய சவால்: சொல்கிறார் வங்கதேச பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ்

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்தத் தொடரின் 2-வது ஆட்டத்தில் வங்கதேச அணியின் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 138 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அதிலும் வங்கதேச அணி 26 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து நெருக்கடியை சந்தித்த நிலையில் லிட்டன் தாஸ் தனது அபாரமான ஆட்டத்தால் சதம் விளாசி சரிவில் இருந்து அணியை மீளச் செய்திருந்தார்.

பாகிஸ்தான் தொடரில் லிட்டன் தாஸுடன் கேப்டன் நஜ்முல் ஹோசைன் ஷான்டோ, மொமினுல் ஹக், முஸ்பிகுர் ரஹிம், ஷகிப் அல் ஹசன், ஷத்மான்இஸ்லாம் உள்ளிட்டோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். பாகிஸ்தான் தொடரை அடுத்து வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டிவரும் 19-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்ரபம் மைதானத்தில் தொடங்குகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.