புரோ கபடியில் இந்த சீசனில் சாம்பியன் பட்டமே இலக்கு: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் சேரலாதன்

சென்னை: புரோ கபடி 11-வது சீசன் போட்டி வரும் அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளது. இம்முறை புரோ கபடி தொடர்கேரவன் மாடலில் நடத்தப்படுகிறது. இதனால் போட்டிகள் ஹைதராபாத், நொய்டா, புனே ஆகிய 3 நகரங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெற உள்ளன.

12 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 19-ம் தேதி தெலுகு டைட்ன்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8மணிக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த சீசனுக்கான கேப்டனை அறிவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கடந்த சீசனில் அணியை வழிநடத்திய சாஹர்ரதியே இம்முறையும் கேப்டனாக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் துணை கேப்டன்களாக சாஹில் குலியா, சச்சின் தன்வார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.