2 மணி நேரம், 149 பந்துகள்: பாகிஸ்தானுக்கு நரகத்தைக் காட்டிய வங்கதேசம்
ராவல்பிண்டி: ராவல்பிண்டியில் நடைபெறும் பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியின் முன்றாம் நாளான நேற்று வங்கதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் என்ற நிலையிலிருந்து 262 ரன்கள் வரை வந்ததற்குக் காரணம், லிட்டன் தாஸ் (138) மெஹதி ஹசன் மிராஸ் (78) மற்றும் ஸ்கோர் சிறிதானாலும் பெரிய பங்களிப்பான ஹசன் மஹமூதுவின் 11 ரன்கள் என்றே சொல்ல வேண்டும்.
பாகிஸ்தானின் குர்ரம் ஷஜாத் மற்றும் மிர் ஹம்சா மிரட்டலாக வீசியதில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ஷத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹுசைன், நஜ்முல் ஹுசைன் ஷாண்ட்டோ, மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹிம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் விரைவில் ஆட்டமிழந்து வரிசையாக மார்ச்ஃபாஸ்ட் செய்ய 26 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. என்ற நிலையில் அவர்களது மிகக்குறைந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோரான 43 ரன்களும் வராதோ என்ற அச்சம் நிலவியது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

