இந்தியாவுக்கு 2-வது தங்கம்: பாரிஸ் பாராலிம்பிக் பேட்மிண்டனில் நிதேஷ் குமார் அசத்தல்!
பாரிஸ்: பாரிஸ் பாராலிம்பிக் ஆடவர் பேட்மிண்டனின் இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது தங்கப் பதக்கம் இது.
பாராலிம்பிக் ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் திங்கள்கிழமை பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை எதிர்கொண்ட இந்திய வீரர் நிதேஷ் குமார் 21-14, 18-21, 23-21 என்ற செட்களில் வென்று தங்கத்தை வசப்படுத்தினார். முதல் செட்டில் மிகச் சிறப்பாக விளையாடி கைப்பற்றியவர், இரண்டாவது செட்டில் சற்றே பின்னடைவை சந்தித்தார். அதன்பின், மூன்றாவது செட்டில் மீண்டெழுந்து இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

