லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஆனார் ஜாகீர் கான்!
புது டெல்லி: இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாகீர் கான், இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
தற்போதைய இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விட்டுச் சென்ற இடத்திற்கு ஜாகீர் கான் இப்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக மோர்னி மோர்கெலை நியமித்தது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. ஆயுள் தோறும் இந்தியாவின் மயானப் பிட்சில் வேகப்பந்து வீசி 300க்கும் அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கானை விட மோர்னி மோர்கெல் எப்படி பொருத்தமாக இருப்பார் என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
