தென்னாப்பிரிக்காவை துவம்சம் செய்த மே.இ.தீவுகள் அணி.. தொடரையும் வென்றது..!
தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே நேற்று நடந்த மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 13 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்த போது மழை குறுக்கிட்டது. இதனை அடுத்து 13 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடிய நிலையில் அந்த அணி 9.2 ஓவரில் இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றது.
நிக்கோலஸ் பூரன் 13 பந்துகளில் 35 ரன்களும், ஹெட்மயர் 17 பந்துகளில் 31 ரன்களும், ஹோப் 24 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இதனை அடுத்து இந்த தொடரில் 3-0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி அபாரமாக தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது.. ரகசிய அறையில் 83 கிலோ..!
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
