2-வது டி20-ல் 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி: தொடரை கைப்பற்றியது மே.இ.தீவுகள்
டிரினிடாட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.
டிரினிடாட்டில் நேற்று நடைபெற்ற 2-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 22 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் விளாசினார். கேப்டன் ரோவ்மன் பவல் 35, அலிக் அத்தனாஸ் 28, ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 29, நிகோலஸ் பூரன் 19 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லிஸாத் வில்லியம்ஸ் 3, பாட்ரிக் க்ரூகர் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
