கோபத்தில் தன் ஹெல்மெட்டை சிக்சருக்கு ‘அடித்த’ கார்லோஸ் பிராத்வெய்ட்!
கோபத்தில் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். ஆனால், மே.இ.தீவுகளின் ஆல்ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் நடுவர் தனக்குத் தவறாக அவுட் கொடுத்ததற்காக தன் ஹெல்மெட்டை மட்டையால் விளாசி பவுண்டரிக்கு வெளியே அடித்தது சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
மாக்ஸ் 60 கரீபியன் 2024 தொடரின் குவாலிஃபையர் 1-ல் இந்தச் சம்பவம் நடந்தது. பிராத்வெய்ட்டின் நியூயார்க் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் கிராண்ட் கேய்மென் ஜாகுவார்ஸ் அணிக்கும் இடையே ஜாஜ்டவுனில் நடைபெற்ற போட்டியில் ஜொஷுவா லிட்டில் வீசிய ஷார்ட் பிட்ச் பந்து பிராத்வெய்ட்டின் வலது தோள்பட்டையில் பட்டு விக்கெட் கீப்பரிடம் செல்ல அவர் அதைப் பிடித்து அப்பீல் செய்ய நடுவர் அவுட் என்று நினைத்துக் விரலை உயர்த்தினார். மட்டைக்கும் பந்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. இதில் கடும் ஆத்திரமடைந்த பிராத்வெய்ட் பெவிலியனுக்கு திரும்பும் வழியில் தன் மட்டையால் ஹெல்மெட்டை ஒரே அடி அடித்து தூக்கி பவுண்டரிக்கு வெளியே அடித்தார். பிறகு தன் இடத்தை நெருங்கிய போது மட்டையையும் வீசி எறிந்தார். இந்த வீடியோதான் இப்போது வைரலாகியுள்ளது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
