‘விரக்தி’ - இன்ஸ்டாவில் புகைப்படம் பகிர்ந்த வினேஷ் போகத்

புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் தனக்கு வெள்ளிப் பதக்கம் வேண்டும் என வினேஷ் போகத் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விளையாட்டுக்கான நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், பதக்கம் பெறுகின்ற வாய்ப்பை இழந்ததன் விரக்தியை வெளிப்படுத்தும் நிலையில் இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வினேஷ் போகத் பகிர்ந்துள்ளார்.

தனது நெற்றியில் கைகளை வைத்துக் கொண்டு ஆடுகளத்தில் சாய்ந்திருப்பது மாதிரியான படத்தை அவர் பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷன் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும் அது சமூக வலைதள பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்தப் படம் விரக்தியின் வெளிப்பாடு போல் இருப்பதால் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு கமெண்ட் மூலம் ஆறுதல் வார்த்தை சொல்லி வருகின்றனர். ‘எப்போதுமே நீங்கள் சாம்பியன்’, ‘மகளே கலங்காதே’, ‘நீங்கள் வலுவாக கம்பேக் கொடுப்பீர்கள்’, ‘எழுந்துவா’ என அந்த கமெண்ட்கள் நீள்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.