கயானா களேபரம்: ஒரே நாளில் 17 விக்கெட்டுகள் சரிவு - மீண்டெழுந்த தென் ஆப்பிரிக்கா!

முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று 2-வது டெஸ்ட் போட்டியை கயானாவில் தொடங்கின. இதில் முதல் நாளே 17 விக்கெட்டுகள் விழுந்தன. தென் ஆப்பிரிக்கா 160 ரன்களுக்குச் சுருள, மேற்கு இந்தியத் தீவுகள் முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் என பின்னடைவு கண்டது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து தவறிழைத்தார், மண்ணின் மைந்தனான ஷமார் ஜோசப் 14 ஓவர்கள் 4 மெய்டன்கள் 33 ரன்கள் 5 விக்கெட்டுகள் என்று அசத்த தென் ஆப்பிரிக்க அணி 54 ஓவர்களில் 160 ரன்களுக்குச் சுருண்டது. ஒருவரும் அரை சதம் அடிக்கவில்லை. 10-ம் நிலை வீரர் டேன் பியட் அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார். ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பந்துகள் காற்றில் நன்றாக ஸ்விங் ஆகின. பிட்ச் ஆனதும் தையலில் பட்டு ஸ்விங் ஆனது, தேவையான பவுன்சும் இருந்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.