13 பவுண்டரி, 9 சிக்சர்களைப் பறக்க விட்ட கருண் நாயர்: 48 பந்துகளில் 124 ரன் விளாசல்

இந்தியாவின் மறக்கப்பட்ட ஹீரோ, பாதியிலேயே அமுக்கப்பட்ட ஹீரோ கருண் நாயர் மகாராஜா டி20 கோப்பை போட்டியில் 48 பந்துகளில் 124 ரன்கள் விளாசி இந்திய அணித் தேர்வுக் குழுவுக்கும் கம்பீருக்கும் வலுவான ‘மெசேஜ்’ அனுப்பியுள்ளார்.

கருண் நாயர் ஒழிக்கப்பட்டது பற்றியும் அவரது தன்னம்பிக்கைப் பற்றியும் நேற்றுதான் நாம் எழுதினோம். அவரை கோலி-ரவிசாஸ்திரி கூட்டணிதான் ஒழித்தது என்று கூறியது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அதுதான் நடந்தது. 3 ஆண்டுகள் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்கள் சதமே அடிக்காத விராட் கோலி என்று தலைப்புச் செய்திகளாகி ஏகப்பட்ட வாய்ப்புகள் கோலிக்கு வழங்கப்பட்டது உண்மையென்றால், கோலிக்கு இருக்கும் ‘லாபி’ கருண் நாயருக்கோ, மணீஷ் பாண்டேவுக்கோ, ஏன் சர்பராஸ் கானுக்கோ கிடையாது என்பதும் உண்மைதான் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.