புச்சிபாபு கிரிக்கெட்: பாபா இந்திரஜித் சதம் விளாசல்

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ லெவன் - ஹரியானா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த டிஎன்சிஏ லெவன் முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் குவித்தது.

பாபா இந்திரஜித்197 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 13பவுண்டரிகளுடன் 139 ரன்கள் விளாசிய நிலையில் ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். லோகேஷ்வர் 203 பந்துகளில், ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் விளாசினார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 60.2 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.