‘வினேஷ் போகத் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது’ - தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் பகிர்வு
சென்னை: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்த நிலையில் இந்த அதிர்ச்சி அரங்கேறியது. இந்தச் சூழலில் அது குறித்து இந்திய தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஜியோ சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 நடத்திய மீடியா ரவுண்ட் டேபிள் நிகழ்வில் அவர் கலந்து கொண்டு பேசினார். அதன் விவரம்:
வினேஷ் போகத் தகுதி இழப்பு - பின்னணி என்ன? - “வினேஷ் போகத் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. இதை நாம் ரியோ ஒலிம்பிக்கில் இருந்து சொல்லியாக வேண்டும். அப்போது அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக காலிறுதியில் இருந்து விலகினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வி. அதன்பின்னர் மிக நீண்ட போராட்டத்தை அவர் மேற்கொண்டார். அதே நேரத்தில் பாரிஸ் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
