காயம் அடைந்துவிடக்கூடாது என்ற சிந்தனை இருந்தது: மனம் திறக்கும் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.இதன் மூலம் ஒலிம்பிக் தடகளத்தில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர், தங்கம் வென்றிருந்தார். மேலும் பி.வி.சிந்து (பாட்மிண்டன்), சுஷில் குமார் (மல்யுத்தம்) ஆகியோருக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒலிம்பிக்கில் 2-வது முறையாக பதக்கம் வென்ற இந்தியர் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நீரஜ் சோப்ரா தொடை பகுதியில் காயம் அடைந்திருந்தார். எனினும் அதை சமாளித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார். வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கூறியதாவது:
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

