வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் கிட்டுமா? - பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் வெளியாகிறது தீர்ப்பு

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டில் பாரிஸ் ஒலிம்பிக் முடிவதற்குள் (ஆக.11) தீர்ப்பு அளிக்கப்படும் என்று விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​மல்யுத்த இறுதிப் போட்டியில் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS- The Court of Arbitration for Sport) வினேஷ் போகத் மேல்முறையீடும் செய்துள்ளார். எனினும், மேல்முறையீடு முடிவு வெளியாகும் முன்னதாக, தனது ஓய்வு முடிவை வினேஷ் போகத் அறிவித்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.