ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார் மனு பாகர்!
புது டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கல பதக்கங்களை வென்று வரலாறு படைத்த இந்திய வீராங்கனை மனு பாகர் வெள்ளிக்கிழமை ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார். முன்னதாக, சோனியா காந்தி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றது குறிப்பிடத்தக்கது.
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாகர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு மற்றும் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி என இரண்டு போட்டிகளிலும் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனை படைத்தார் மனு பாகர். கடந்த 7-ம் தேதி தாயகம் திரும்பிய அவருக்கு டெல்லியில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

