அன்ஷு மாலிக் ஏமாற்றம் முதல் ஜோதி யார்ராஜி வெளியேற்றம் வரை | இந்தியா @ ஒலிம்பிக்

பதக்கத்தை தவறவிட்டார் மீராபாய் சானு: மகளிருக்கான பளுதூக்குதலில் 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு 199 கிலோ (ஸ்னாட்ச்சில் 88 கிலோ கிளீன் அன்ட் ஜெர்க்கில் 111 கிலோ) எடையை தூக்கி 4-வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். டோக்கியோ ஒலிம்பிக்கில் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த மீராபாய் சானு மீது இம்முறை அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் அவர், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கைவிட 3 கிலோ எடையை குறைவாகவே தூக்கினார். 6 முயற்சிகளில் மீராபாய் சானுவால் 3 முறை மட்டுமே எடையை தூக்க முடிந்தது. முன்னாள் உலக சாம்பியனான அவர், ஸ்னாட்ச் போட்டிக்குப் பிறகு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பில் இருந்தார். ஆனால், அவர் தனது கடைசி க்ளீன் அன்ட் ஜெர்க் முயற்சியில் 114 கிலோ எடையை தூக்கத் தவறினார். இதனால் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.