பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் வெண்கல பதக்கம் வென்றது இந்திய அணி: 52 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33-வது ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஹாக்கியில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில், அரை இறுதியில் தோல்விகளை சந்தித்த இந்தியா, ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் கால் பகுதியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் 15 நிமிடங்களில் ஸ்பெயினின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஊடுருவி பலமுறை இந்திய வீரர்கள் அச்சுறுத்தல் கொடுத்தனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


