பேட்டிங்கில் தடுமாறினாலும் காழ்ப்பைக் காட்டும் கோலி - இலங்கை வெற்றியால் ஆடிப்போன இந்திய அணி!
27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருக்கிறது இலங்கை. இந்திய அணி இந்தத் தொடரை இழந்ததனால் ரொம்பவும் ஆடிப்போய் உள்ளனர். தோல்வி மீதான வெறுப்பும் கோபமும் கோலியிடமிருந்தும், அவர் தூண்டுதலினால் சிராஜிடமிருந்தும் ஆவேசமாக இலங்கை அணி வீரர்கள் மீது செலுத்தப்பட்டது புதன்கிழமை நடைபெற்ற போட்டியைப் பார்த்தவர்களுக்கு வெளிப்படை.
மூன்று போட்டிகளிலும் இந்திய அணி இலங்கை ஸ்பின்னர்களிடம் 27 விக்கெட்டுகளைக் கொடுத்து மடிந்தனர். ஸ்பின் என்றால் இந்தியாவிடம் பலிக்காது என்ற நிலை போய், இப்போது இத்தனை விக்கெட்டுகளை ஒரே தொடரில் ஸ்பின்னர்களிடம் பறிகொடுத்து இந்திய அணி தேவையில்லாத ஒரு சாதனையை இலங்கை அணிக்கு வழங்கியுள்ளது அல்லது இலங்கை அணி இந்திய அணியின் ‘சோ கால்டு சூப்பர் ஸ்டார்கள்’ மீது செலுத்தியுள்ளது எனலாம். பாகிஸ்தானுக்கு எதிராக பங்களாதேஷ் அணி ஒரே ஒருநாள் தொடரில் 21 விக்கெட்டுகளைக் கொடுத்ததுதான் சாதனையாக இருந்தது. இப்போது வங்கதேசத்தை விடவும் தாழ்ந்துவிட்டது இந்திய ஒருநாள் அணி.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


