பெற்றோரின் இழப்பு, தாத்தாவின் உத்வேகம்... அமன் ஷெராவத்தின் ஒலிம்பிக் பயணம்!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஒவ்வொரு சுற்றிலும் அசத்தி வரும் அமன் யார் என்பது குறித்து பார்ப்போம்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அமன் ஷெராவத், மாசிடோனிய வீரர் விளாடிமிர் எகோரோவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் ஜெலிம்கான் அபகரோவை 12-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். அவர் இந்தியாவின் பதக்க நம்பிக்கை வீரராக திகழ்கிறார். மேலும் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் மல்யுத்தத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வீரர் அமன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.