நூலிழையில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்த அவிஷ்கா பெர்னாண்டோ… வலுவான நிலையில் இலங்கை!


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் ஒரு போட்டியை இலங்கை வெல்ல, இன்னொரு போட்டி சமனில் முடிந்தது. இதன் மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து வருகிறது.  இலங்கை அணிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.  பதும் நிஸாங்கா 48 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து ஆடிய அவிஷ்கா பெர்னாண்டோ சதத்தை நெருங்கினார்.

96 ரன்களில் அவர் இருந்த போது ரியான் பராக்கில் பந்துல் LBW முறையில் ஆட்டமிழந்து நான்கு ரன்களில் சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். தற்போது இலங்கை அணி 2 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் சேர்த்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.