இறுதிக்கு முன்னேறிய நீர்ஜ் சோப்ரா முதல் கிரண் பஹல் ஏமாற்றம் வரை | இந்தியா @ ஒலிம்பிக்
பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று நடைபெற்றது. இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா தனது முதல் வாய்ப்பிலேயே 89.34 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்த சீசனில் அவரது சிறப்பான செயல் திறனாக இது அமைந்தது.
84 மீட்டர் தூரம் எறிந்தாலே நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுவிடலாம். இதனால் 26 வயதான நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். தகுதி சுற்றில்ஒவ்வொரு வீரருக்கும் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எந்த வாய்ப்பில் அதிக தூரம் வீசுகிறாரோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

