ஒலிம்பிக்கில் மனு பாகர் 3-வது பதக்கத்துக்கு ‘குறி’ - இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

பாரிஸ்: ஒலிம்பிக் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்று பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து இந்திய வீராங்கனை மனு பாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் அவர் மூன்றாவது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் தகுதிச் சுற்று பிரிவில் இந்தியாவின் மனு பாகர் உள்ளிட்ட 8 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் மனு பாகர் 590-24x புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா மேஜர் 592 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான ஈஷா சிங் 581-17x புள்ளிகள் பெற்று 18-வது இடம்பிடித்து வெளியேறினார். இதன் இறுதிப் போட்டி சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் மூலம் மனு பாகர் 3-வது பதக்கத்தை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.