ஒலிம்பிக் பாட்மிண்டனில் லக்‌ஷயா சென் அரையிறுதிக்கு முன்னேறி சாதனை!

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டனில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் தியென் சென்னுடன் பலப்பரீட்சை மேற்கொண்டார் லக்‌ஷயா சென். இதில் முதல் செட்டில் 2-5 என்ற கணக்கில் அவர் பின் தங்கி இருந்தார். இருப்பினும் அந்த செட்டில் பலமான போட்டியை தியென் சென்னுக்கு கொடுத்திருந்தார். முதல் செட்டை 19-21 என்ற கணக்கில் இழந்திருந்தார். 2-வது செட்டை 21-15 என்ற கணக்கில் லக்‌ஷயா சென் கைப்பற்றினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.