இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு முன்னேற்றம் | ஒலிம்பிக் குத்துச்சண்டை

பாரிஸ்: ஒலிம்பிக் குத்துச்சண்டையில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹைன். 75 கிலோ எடைப் பிரிவில் நார்வேயின் சுனிவா ஹோஃப்ஸ்டாட்டை ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் அவர் வீழ்த்தினார்.

இந்த ஆட்டம் தொடங்கியதும் லவ்லினாவை செட்டில் ஆக விடாமல் சில பஞ்ச்களை கொடுத்தார் சுனிவா. இருந்தும் சுதாரித்துக் கொண்ட லவ்லினா கவுண்டர் அட்டாக் செய்தார். அதற்கு தனது உயரத்தையும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். ஆக்ரோஷமான அணுகுமுறை மூலம் தனக்கு வேண்டிய புள்ளிகளை பெற்றார். மூன்று சுற்றுகளின் முடிவில் 5-0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் லவ்லினா வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.