ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மனு பாகர், சரப்ஜோத் சிங்குக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
புதுடெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவில் இந்தியாவின் மனு பாகர் மற்றும் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இருவரும் எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து: “துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவு போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாகர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதல் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார் மனு பாகர். அவர் நம்மை மிகவும் பெருமை கொள்ளச் செய்துள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல விருதுகள் வெல்ல அவரையும் சரப்ஜோத் சிங்கையும் வாழ்த்துகிறேன்” என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

