அஸ்வினுக்கு ‘மன்கட்’ அவுட் எச்சரிக்கை கொடுத்த பவுலர் @ TNPL
திண்டுக்கல்: நடப்பு டிஎன்பிஎல் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வினுக்கு ‘மன்கட்’ அவுட் அலர்ட் கொடுத்திருந்தார் நெல்லை ராயல் கிங்ஸ் பவுலர். அது குறித்து பார்ப்போம்.
‘மன்கட் அவுட்’ என்றால் அனைவருக்கும் சட்டென நினைவுக்கு வருவது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். ஏனெனில், கடந்த 2019 ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணிக்காக அஸ்வின் விளையாடிய போது இதே முறையில் ராஜஸ்தான் வீரர் பட்லரை அவுட் செய்திருந்தார். அது கிரிக்கெட் உலகில் விவாதமானது. இருந்தும் அது பவுலர்களின் உரிமை என அப்போது அஸ்வின் தெரிவித்திருந்தார். பலமுறை இந்த மன்கட் அவுட் சார்ந்து அவர் தனது கருத்தையும் சொல்லி உள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

