ஒலிம்பிக் பாட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
பாரிஸ்: ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
33-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் அப்துல் ரசாக் நபாஹா ஆகியோர் மோதினர். இந்த ஆட்டத்தில் சிந்து, 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமத் அப்துல் ரசாக்கை வீழ்த்தினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

