சூர்யகுமார் அரைசதம்: இலங்கை அணிக்கு 214 ரன்கள் இலக்கு!

பல்லேகலே: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 213 ரன்களை குவித்தது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்து அசத்தினார்.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் பல்லேகலேவில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஓப்பனர்களாக ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை களமிறங்கியது. முதல் 5 ஓவர் வரை இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தில்ஷான் மதுஷங்கா வீசிய 6வது ஓவரில் ஷுப்மன் கில் கேட்ச் கொடுத்து 34 ரன்களில் வெளியேறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.