“இந்திய அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை” - தமிழக வீரர் நடராஜன் கருத்து

மதுரை: இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை என தமிழக வீரர் நடராஜன் கூறியுள்ளார்.

தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக மதுரை வந்திருந்த தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "பாரம்பரிய கோயில் நகரமான மதுரைக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அணியில் எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் தான் நான் இந்த வளர்ச்சியை அடைந்துள்ளேன். எனக்கு ஏற்பட்ட காயங்களால் தான் என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது. மற்றபடி இந்திய கிரிக்கெட் அணித் தேர்வில் எந்த அரசியலும் இல்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.