கம்பீர் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்சினை எது தெரியுமா? - ரவி சாஸ்திரியின் கணிப்பு 

புதுடெல்லி: “கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக்கியது ஒரு புத்துணர்வு தரக்கூடியது மற்றும் அவர் சமகாலத்தவர். அவரிடம் புதிதான யோசனைகள், கருத்துக்கள் இருக்கும் என்பன போன்ற சாதகங்கள் இருக்கின்றன” என்று கூறும் ரவி சாஸ்திரி, கவுதம் கம்பீர் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை என்னவாக இருக்கும் என்பதை விவரித்துள்ளார்.

இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறுகையில், “கம்பீர் சமகாலத்தவர், இப்போதிருக்கும் வீரர்களுடன் சேர்ந்து அணியில் விளையாடியிருப்பவர், ஐபிஎல் தொடர் அவருக்கு பெரிய சீசனாக, வெற்றியாக அமைந்தது. சரியான வயதில் பயிற்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். அவரிடம் புதிய கருத்துக்கள், யோசனைகள் இருக்கும். அவருக்கு அணியில் இருக்கும் அனைத்து வீரர்களையும் தெரியும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.