வங்கதேசத்தை வீழ்த்தி மகளிர் ஆசிய கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!
கொழும்பு: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய மகளிர் அணி. வங்கதேசத்துடனான ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது.
நடப்பு மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இலங்கையில் உள்ள ரங்கிரி தம்புலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக இறங்கிய திலாரா அக்தெர், முர்ஷிதா காதுன் சொற்ப ரன்களில் வெளியேறினர். இவர்கள் முறையே 6 மற்றும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதில் அக்தெர் முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்து வந்த இஷ்மா தன்ஜிம் 8 ரன்களுக்கு நடையைக்கட்டினார். இப்படியாக வங்கதேசத்தின் டாப் ஆர்டரின் 3 விக்கெட்டையும் இந்திய வீராங்கனை ரேணுகா சிங் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


