பாரிஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் தகுதி சுற்று இன்று தொடக்கம்
பாரிஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் நகரில் நாளை (26-ம் தேதி) கோலாகலமாக தொடங்குகிறது. இந்த திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியாவில் இருந்து 117 வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர்.
இந்நிலையில் பாரிஸ் நகரில் உள்ள லெஸ் இன்வாலிடெஸ் கார்டனில் வில்வித்தை போட்டிக்கான தகுதி சுற்று இன்று தொடங்குகிறது. உலக கோப்பை வில்வித்தை தொடர்களில் பல்வேறு காலக்கட்டங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ள போதிலும் ஒலிம்பிக்கில் இதுவரை பதக்கம் வென்றது இல்லை. இதற்கு இம்முறை தீர்வு காண இந்திய அணியினர் முயற்சிக்கக்கூடும். மகளிர் தனிநபர் ரேங்கிங் சுற்று பிற்பகல் 1 மணிக்கும், ஆடவர் தனிநபர் ரேங்கிங் சுற்று மாலை 5.45 மணிக்கும் தொடங்குகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


