‘ஒரே நாளில் 600 ரன்கள் குவிப்போம்!’ - ஆலி போப் எச்சரிக்கை
நிச்சயம் ஒருநாள் தங்கள் அணி ஒரே நாளில் டெஸ்ட் போட்டியில் 600 ரன்களை குவிக்கும் என இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஆலி போப் தெரிவித்துள்ளார். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் சூளுரைத்துள்ளார்.
பிரெண்டன் மெக்கல்லம் பயிற்சியின் கீழ் உருவாகியுள்ள ‘பாஸ்பால்’ அதிரடி பேட்டிங் முறையை இங்கிலாந்து தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. இந்தியாவிற்கு எதிராக அந்த பாச்சா பலிக்கவில்லை தொடரை பெரிய மார்ஜினில் இழந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகுதியளவில் கைகொடுத்த பாஸ்பால் அணுகுமுறையால் ஆஷஸ் தொடரை 2-2 என்று ட்ரா செய்தனர். உண்மையில் மரபான டெஸ்ட் தொடரை ஆடியிருந்தால் இங்கிலாந்து கடந்த ஆஷஸ் தொடரை 3-2 என்று கைப்பற்றி இருக்கலாம். எந்த விதத்தில் பாஸ்பால் ‘சக்சஸ்’ என்று போப் கூறுகிறார் என்று தெரியவில்லை.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


