சாஹலின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிகிறதா? - ஒரு விரிவான அலசல்

கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் வந்த முதல் மாற்றம், சமீப காலங்களாக அணி தேர்வுக்குழுத் தலைவர் செய்தியாளர்களைச் சந்திக்காமல் இருந்தனர். இப்போது கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகார்க்கருடன் செய்தியாளர்களைச் சந்திப்பது வெளிப்படைத் தன்மைக்கான முதல் அடியாகப் பார்க்கப்படலாம். ஆனால், அணியில் இந்த வீரர்கள் இல்லையே ஏன்? மற்றும் அணித்தேர்வின் தன் பரிந்துரைகள் பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது முரணாகப் பார்க்கப்படலாம்.

ஏனெனில், டி20 உலகக் கோப்பை தொடரில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் யுவேந்திர சாஹல் இடம்பெற்றிருந்தார். ஆனால், ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. அல்லது அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது. ஆனால், ஷுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே தொடரிலும் சாஹல் தேர்வு செய்யப்படவில்லை. இலங்கைத் தொடருக்கான அணியிலும் அவர் இல்லை. வழக்கமாக அவருக்கு ‘ஓய்வு’ அல்லது ‘காயம்’ என்று எதையாவது சொல்வார்கள். ஆனால், சாஹலுக்கு அந்தப் பாக்கியம் கூட இல்லை. அவரது தேர்வின்மை குறித்து யாரும் கேள்வி கூட எழுப்பத் தகுதியற்ற ஒரு வீரராகி விட்டார் போலும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.